டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் 9ஆண்டு நினைவு தினத்தில் ..
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் 9ஆண்டு நினைவு தினத்தில் வேப்பம்பட்டு கிராமத்தை பசுமையாக்க முதற் கட்ட பணி துவக்கம்... திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் 27.07.24 அன்று காலை அலுவலகத்தில் பசுமை நாயகன். அறிவியல் விஞ்ஞானி. மக்களின் குடியரசு தலைவர்... அமரர்.டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 9ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு அப்துல் கலாம் அவர்களின் நினைவாக வேப்பம்பட்டு பகுதியை பசுமையாக்கும் முதற் கட்ட பணியை ஜேசிஐ பாலாறு வாணியம்பாடிதலைவர் திரு.அன்பரசு முன்னிலையில் அறக்கட்டளை தலைவர் சேதுராமன் தலைமையில் தொடங்கப்பட்டது. நம் சந்ததிகளை காக்க கலாம் அய்யா விட்டு சென்ற பசுமை பணியை செய்வோம். மாசற்ற சுற்றுச்சூழலை உறுவாக்குவோம். என உறுதி மொழி ஏற்கப்பட்டது.. பிறகு சிறப்பு அழைப்பாளர்களை அறக்கட்டளை துணை தலைவர் உமேஷ் . மற்றும் சுரேஷ் வரவேற்றனர். பசுமை கிராமம் உருவாக்க சிறப்பு அழைப்பாளராக. ஜெ சி ஐ பாலாறு தலைவர்.திரு.அன்பரசு. முத்தமிழ் மன்ற தலைவர். திரு.பிரகாசம். வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் KBS .மாதேஸ்வரன். கலாம் காமராஜ் அறக்கட்டளை தலைவர்.விஜய்ஆனந்த். வேர்கள் அறக்கட்டளை தலைவர் வடிவேல் சுப்பிரமணியம். மற்றும் வேம்பம்பட்டு ஊர் நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டு ஆளுக்கொரு மரக்கன்றுகள் நடவு செய்தனர். வருகை புரிந்த அனைவருக்கும் அறக்கட்டளை செயளாலர் திரு. சதிஷ்குமார் நன்றி தெரிவித்தார் .. உடன் பத்தாப்பேட்டை கிளை.லாலாஏரி கிளை. கோணாமேடு.மேட்டுபாளையம் .இளையநகரம்.கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....... .
Leave a Reply