விலையுயர்ந்த ரோமம்.. பராமரித்த பண்ணை உயிர்.. கொரோனா தொற்றால் மில்லியன்கணக்கில் கொல்லப்படும் மிங்க் விலங்குகள்..
விலையுயர்ந்த ரோமம் எடுப்பதற்காக வளர்க்கப்படும் மில்லியன்கணக்கான மிங்க் உயிரினங்கள், கொரோனா பரப்புவதன் காரணமாக ஸ்பெயின் நாட்டிலும், நெதர்லாந்திலும் கொத்து கொத்தாக அழிக்கப்பட்டு வருகிறது ஸ்பெயினின், வடகிழக்கு ஆரகான் பகுதியில் அமைந்திருக்கும் பண்ணைகளில் இருக்கும் 92.700 மிங்க் விலங்குகள் அழிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு வேளாண்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று வன விலங்குகளிடமும் பரவும் அபாயம் ஏற்பட்டால், அரியவகை உயிரினங்களான கொரில்லாக்களும், சிம்பான்சிளும் கூட பாதிப்புக்குள்ளாகும் என சூழலியலாளர்கள் அஞ்சுகிறார்கள். ரோமத்தை எடுப்பதற்காக கொல்லப்படும் அதே முறையில், கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயுக்களை வைத்து மிங்குகள் கொல்லப்பட்டு வருகின்றன. நெதர்லாந்து மிங்க் ரோம உற்பத்தியில் நான்காவது பெரிய உற்பத்தி நாடாக உள்ளது. ஸ்பெயின் ஐரோப்பிய நாடுகளில் ஏழாவது பெரிய ரோம ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது. .
Leave a Reply